என்னை சேதுவா செதுக்கியவன் கார்த்திக்

என்னை சேதுவா செதுக்கியவன் கார்த்திக்









ஜிகிர்தண்டா படத்தின் மூலம் தனது பிரகாசமான கேரியரை தொடங்கியிருக்கிறார் சிம்ஹா. நேரம், பீட்சா, சூது கவ்வும் படங்களில் நடித்திருந்தாலும் ஜிகிர்தண்டா சிம்ஹாவுக்கு பெரிய அடையாளத்தை கொடுத்திருக்கிறது. ஆனால் இதற்கு காரணம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்தான் அதனால் அவரை பாராட்டுங்க என்கிறார் சிம்ஹா.

அவர் மேலும் கூறியதாவது: டிகிரி முடிச்சிட்டு சென்னைக்கு வேலைக்கு போறேன்னு பொய் சொல்லிட்டு வந்து சினிமா சான்ஸ் தேடினேன். கார்த்திக் சுப்புராஜ் நட்பு கிடைச்சுது. நாலு வருஷத்துக்கு முன்னாடியே ஜிகிர்தண்டா கதை தெரியும் சேது கேரக்டர்ல நான்தான் நடிப்பேன்னு சொன்னேன். அப்போ அதுக்கு நீ செட்டாக மாட்டேன்னு சொன்னவன். நேரம் படத்துல நான் பண்ணின தாதா கேரக்டரை பார்த்துட்டு நீ தான் சேதுன்னு சொன்னான்.

என்னை சேதுவா செதுக்கியவன் கார்த்திக் என்னோட ஒவ்வொரு அசைவையும் உருவாக்கியவன். அதனால் கிடைக்கிற பாராட்டெல்லாம் அவனுக்குத்தான். சித்தார்த் பெரிய ஹீரோவாக இருந்தும் எனக்கு இடம் கொடுத்து நடிச்சார். அதுக்கு பெரிய மனசு வேணும். நான் சினிமாவுக்கு வந்தபோது என்கிட்ட கோவிச்சிக்கிட்ட அப்பா, வருத்தப்பட்ட அம்மா எல்லோரும் மகன் தேறிடுவான்னு நம்பிக்கை வந்து பேசுறப்போ சந்தோஷமா இருக்கு. வில்லனோ, காமெடியனோ நடிப்புக்கு தீனி போடுறமாதிரி நல்ல வேலை செய்யுற மாதிரி கேரக்டர்கள்ல நடிப்பேன் என்கிறார் சிம்ஹா.

No comments:

Post a Comment