நிபந்தனைகளில் முக்கியமானது - சமந்தா













சூர்யா, சமந்தா நடித்துள்ள அஞ்சான் படம் வருகிற 15-ம் தேதி ரிலீசாகிறது. படத்தின் ஆடியோ வெளியீடு உள்ளிட்ட எந்த புரமோஷன் நிகழ்ச்சிக்கும் வராத சமந்தா தற்போது பத்திரிகை மற்றும் டி.வி புரமோஷன் நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருக்கிறார். அதாவது வலுக்கட்டாயமாக வரவழைக்கப்பட்டிருக்கிறார்.

வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருக்கும் அவர் தினமும் பத்திரிகையாளர்களுக்கும், டி.வி மீடியாக்களுக்கும் தனித்தனியாக பேட்டி கொடுத்து வருகிறார். பேட்டி எடுக்க செல்கிறவர்களிடம் அவரும், அவரது உதவியாளர்களும் வெளியில் போர்டு எழுதிப்போடாத குறையாக நிபந்தனை விதிக்கிறார்கள்.

சித்தார்த் பற்றி எதுவும் கேட்ககூடாது. திருமணம் எப்போது என்று கேட்க கூடாது. கவர்ச்சியாக நடிப்பது பற்றி கேட்க கூடாது. சரும நோய் பற்றி கேட்க கூடாது. கேள்விகள் அனைத்தும் அஞ்சான் படம் பற்றியதாவே இருக்க வேண்டும் என்பது அந்த நிபந்தனைகளில் முக்கியமானது.


No comments:

Post a Comment