கத்தி பாடல் விழாவில் ஆர்யா பேசியது என்ன?









தான் அறிமுகமான முதல் படமான அறிந்தும் அறியாமலும் படத்தில் நவ்தீப்புடன் இணைந்து நடித்தார் 
ஆர்யா. அதையடுத்து பட்டியல் படத்தில் பரத்துடன் இணைந்து நடித்தார். அவன் இவனில் விஷால், உருமியில் ப்ருத்விராஜ், ராஜா ராணியில் ஜெய், ஆரம்பம் படத்தில் அஜீத் என பல படங்களில் மற்ற நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார் ஆர்யா.
அந்த வரிசையில் தற்போது புறம்போக்குவில் விஜயசேதுபதி, யாட்சனில் கிருஷ்ணாவுடனும் இணைந்து நடித்து வருகிறார். இப்படி டபுள் ஹீரோ சப்ஜெக்டுகளில் ஆரம்பத்தில் இருந்தே நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வரும் ஆர்யா, இதுவரை விஜய்யுடன் இணைந்து நடித்ததில்லை. அதனால் அடுத்து விஜய்யுடனும் நடிக்க ஆசைப்படுகிறாராம்.
நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற கத்தி ஆடியோ விழாவுக்கு வந்திருந்த ஆர்யா, மேடையில் பேசும்போது, விஜய்யை பற்றி பெருமையாக பேசினார். அதோடு, நான் பல படங்களில் மற்ற ஹீரோக்களுடன் இணைந்து நடித்து விட்டேன், ஆரம்பம் படத்தில் தல அஜீத்துடன் நடித்து விட்டேன். ஆக, அவருடன் நடிக்க வேண்டுமென்ற ஆசை தீர்ந்து விட்டது. ஆனால் தளபதி விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை நீண்டகாலமாக உள்ளது. ஆனால், சந்தர்ப்பம்தான் இதுவரை அமையவில்லை. அதனால் அப்படியொரு வாய்ப்புக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன் என்று விஜய் முன்னிலையில் தெரிவித்தார் ஆர்யா.


No comments:

Post a Comment