பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆபத்துகள் :















பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆபத்துகள் :
பிராய்லர் கோழி தற்போது கிலோ 180rs
க்கு விற்பனை செய்யப்படுவதன் நோக்கம் தெரியுமா ?
பிறந்து 55நாட்களில் கல்லீரல்,தமனி,நுரையீரல்
என்று எல்லாத்தையும் இழக்கும்
ஒரு செயற்கை பிராணியை தான் நாம் ஹலால்
என்று முட்டாள் தனமாக உண்டு வாழ்கிறோம் ...
இந்த
விசயத்தில் கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே ...
இன்னும் சில நாட்களில் கோழி கறியினால்
வரப்போகும் பிரச்சனைகளால் 120rs-இல் இருந்து 40rs
நோக்கி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் ,
இவர்களின் திட்டத்தின் படி 180rs
என்று விலையை உயர்த்தி , பிறகு 120rs என்ற
சமநிலையை கொண்டு வரும் நோக்கத்தில் தான்
இப்படி செய்கின்றனர்
மேலும் இதை விரும்பி சாப்பிடும்
நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும்
அழிகிறது,,, மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல்
செயலிழப்பு என்று வியாதிகளின்
எண்ணிக்கையை அடுக்கலாம் ... .ப்ராய்லர்
கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட
நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய்
பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது .... அவர்கள் படும்
கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில
அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம்
உண்மை மக்களிடம் போகாமல் பார்த்துக்கொள்கின்றனர்....
நாமக்கலின் HEALTH CARE ORGANIZATION
எவ்வளவோ முயற்ச்சி எடுத்தும் அவர்களால் இந்த
உண்மையை ஆனந்த விகடன் புத்தகத்தில் ஆறாம்
திணை என்ற தொகுப்பில் மட்டும் தான்
விழிப்புணர்வை ஏற்படுத்த முடிந்தது .....
உடலின் ஏழு சுவைகளையும் வளர்க்க
ஆறு சுவைகளில் காய் கனிகளும் ஏராளமாகப் புலால்
உணவும் அன்றைய ஐந்து திணைகளிலும் இருந்தன.
ஆடு, மாடு, கோழி, காடை, கௌதாரி என அன்றைய
தமிழர் புசிக்காத புலால் இல்லை. பச்சை ஊனைப்
புசித்து, புறங்கையில் வழியும் குருதியையும்
புலால் நெய்யையும் பூட்டிய வில்லில் தடவி நின்ற
போர் வீரன்குறித்து சங்க இலக்கியங்கள் பல இடங்களில்
பேசுகின்றன.
இன்றைக்கு அசைவம் சாப்பிடுவதுபற்ற
ி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று...
அசைவம் சாப்பிட்டால், உடம்பு வளரும்;
மூளை வளராது; சைவமே சிறந்தது என்பது.
இரண்டாவது... அசைவம் சாப்பிடுவோருக்குக் காய்,
கனிகள் ஒரு பொருட்டே அல்ல என்பது. இவை இரண்டில்
எது சரி? உண்மை இவை இரண்டுக்கும் நடுவில்
இருக்கிறது என்பதே சரி!
அசைவம் சாப்பிட்டால்,
மூளை வளராது என்பது உழைக்கும்
வர்க்கத்தை இழிவுபடுத்தும் ஒரு கருத்து. நோபல்
பரிசு வாங்கியவர்களில் 99 சதவிகிதத்தினரும்,
உலகை உலுக்கி மாற்றிய 'மைக்ரோசாஃப்ட்’, 'ஆப்பிள்
முதலாளிகளும் அசைவப் பிரியர்கள்தான்.
புலாலில்
உள்ள புரதமும் சில நுண் சத்துக்களும் பொதுவாகக்
காய், கனிகளில் குறைவு. உதாரணத்துக்கு, 100 கிராம்
ஈரலில், 6,000 மைக்ரோ கிராம் இரும்புச் சத்து உண்டு.
100
கிராம் கேரட்டில் 300 மைக்ரோ கிராம்தான்
இரும்புச் சத்து இருக்கிறது. ஆகையால், அசைவத்தின்
ஆற்றலைக் கேள்விக்குறியாக்க வேண்டியது இல்லை.
ஆனால், அசைவம் மட்டுமே போதுமா?
அசைவத்தை எப்படிச் சாப்பிட வேண்டும்?
எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதுதான்,
முக்கியமான ஒரு கேள்வி!
ஏனென்றால், போருக்குப் போகும் வீரன் சாப்பிட்டது,
காரில் போகும் சுகவாசிக்கு அப்படியே சரிப்படாது.
அன்று முதல் இன்று வரை கட்டுமரத்தில்
நெடுஞ்சாணாக நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட
அளவு, நோஞ்சானாக கேண்டில் லைட் டின்னரில் 'ஃபிஷ்
ஃப்ரைஆர்டர் செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்குச்
சரி வராது. உழைக்கும் அளவுக்கும் வாழும்
நிலத்துக்கும் உண்ணும் அளவைத் தீர்மானிப்பதில்
எப்போதுமே முக்கியமான பங்கு உண்டு.
அசைவம்
சாப்பிடலாம். ஆனால், அளவாகச் சாப்பிடுங்கள்.
ஐந்து பேர்கொண்ட ஒரு குடும்பம்
வாரத்துக்கு ஒரு நாள்
அரை கிலோ ஆட்டு இறைச்சியோ,
ஒரு கிலோ கோழிக் கறியோ,
ஒரு கிலோ மீனோ சாப்பிட்டால் போதுமானது.
அதையும்கூட இரண்டு நாட்களாகப்
பிரித்து எடுத்துக்கொண்டால், இன்னும் சிறப் பானது.
ஏனைய நாட்களில் காய், கனிகளுக்கு இடம் கொடுங்கள்.
வாரத்தில் ஒரு நாள் -
குறைந்தது ஒரு வேளையேனும்
வயிற்றுக்கு ஓய்வு கொடுத்து விரதம் இருங்கள்.
எல்லாமே விருந்துதான். எல்லாவற்றுக்கும
ே ஒரு புரிதல் தேவைப்படுகிறது!
அட்டகாசமான கறி விருந்து சாப்பிட்டால்,
மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித்
துவையலுடன் எளிமையாக அன்றைய
சாப்பாட்டை முடித்துக்கொள்ளும் வழக்கம் நம்
முன்னோர்களிடம் உண்டு. ஆட்டின்
இறைச்சி உடலுக்குத் தேவையான வலுவைத் தரும்
என்றால், கொள்ளும் இஞ்சியும் கொழுப்பைக்
கரைக்கும் என்பதை அறிந்துவைத்திருந்தார்கள் நம்
முன்னோர்கள். நாம் எதை அறிந்துவைத்திருக்கிறோம்?
மாமிசம் சாப்பிடும்போது, நிச்சயம் இஞ்சி, பூண்டு,
சீரகம், மல்லி, பெருங்காயம் இருக்க வேண்டும்
என்கிறது தமிழ் மருத்துவம். இது வரை எந்தத் தமிழர்
வீட்டு அடுப்பங்கரையிலும் இந்தக்
கறி மசாலா இல்லாமல் கிடாக்
கறி சமைக்கப்பட்டது கிடையாது. ஆனால், புதிதாக
வெளிநாட்டில்
இருந்து இங்கு மூலைக்கு மூலை முளைத்து உள்ள
பன்னாட்டு கறிக் கடைகள் பொரித்தும் அவித்தும் தரும்
கறி பக்கோடாக்களில் கறி மசாலாவை நீங்கள் பார்க்க
முடியாது தெரியுமா? சரி, கண்ணாடிக் குளிர்
அறைகளில், நண்பர்களுடன் உட்கார்ந்து சாப்பிடுகிறீர்க
ளே... அந்தக் கறியில் என்னென்னஎல்லாம்
கலந்து இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா?
தெரிந்துகொள்ளுங்கள்... நூற்றுக்கணக்கான ரசாயனக்
காரணிகள் அவற்றில் உண்டு. ஏகப்பட்ட ரசாயன உப்புகள்
உண்டு. குறிப்பாக,
புற்றுநோய்க்கு வரவேற்பு வளைவுகள் வைக்கும்
சோடியம் நைட்ரேட், மோனோ சோடியம் க்ளூட்டமேட்
உப்புகள் உண்டு.
கோழி நல்ல உணவு. ஆனால், அது தானாக
இரை தேடி வளர்ந்த கோழியாக இருக்க வேண்டும்.
ஊசி போட்டு வளர்ந்த கோழியாக இருக்கக் கூடாது.
கோழிக் கறி பொதுவாக உடல் சூட்டைத் தந்து நோய்
போக்கக் கூடியது. சாதாரண சளி, இருமல், மந்தம்
போக்கக் கூடியது; உடல்
தாதுவை வலுப்படுத்தி ஆண்மையைப்
பெருக்கக்கூடியது என்கிறது சித்த மருத்துவம்.
கோழியில் நார்ச் சத்து அதிகம்; வைட்டமின் பி 12
சத்தும் அதிகம். உடல் எடை அதிகரிக்காது, வலுவுடன்
ஆரோக்கியத்துடன் இருக்க
சிக்கனுக்கு இணை எதுவும் இல்லை என்கிறது நவீன
உணவியல்.
நம் ஊரில் கருங்கோழி எனும் நாட்டு இனக்
கோழி இன்றும் இருக்கிறது. காலில் அதிக மயிருடன்
ஷூ போட்டதுபோல் மிடுக்காக இருக்கும். அந்தக்
கோழியின் சதைப் பகுதியும்கூட
கருஞ்சிவப்பு நிறமாக இருக்கும். தமிழ் மருத்துவம்
தசை சூம்பி வலுவிழந்து இருக்கும் பக்கவாத
நோயினருக்கும், பிற தசை நோயினருக்கும் இந்தக்
கோழியைத்தான் உணவாக, மருந்தாகப்
பன்னெ டுங்காலமாக உரக்கச் சொல்லிவருகிறது. நாம்
இப்போது சாப்பிடும் கோழி இறைச்சி யின்,
பின்னணி குறித்து, 'கூவாத கோழியும்,
குடை சாயும் இறையாண்மையும்என்ற புத்தகத்தில்
அதன் ஆசிரியர் சுந்தரராசன் கூறும் தகவல்கள்
அதிரவைப்பவை.
'பிராய்லர் கோழிகளின் செழுமை யான
தோற்றத்துக்காக அளிக்கப் படும்
'
ரோக்ஸார்சோன்’ (Roxar-sone) என்ற
மருந்து மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்க
வல்லது என்கிறது அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில்
அமைந்துள்ள டியூக்கேன் பல்கலைக்கழக
ஆய்வு முடிவுகள். குழந்தைப்
பருவத்திலேயே சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக்
குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்களும், இந்த
பிராய்லர் கோழிகளையும் லேயர் கோழிகள் இடும்
முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளும்
மனிதர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகப்
பல்வேறு ஆய்வு கள் தெரிவிக்கின்றன!'
என்று புத்தகத்தில் தந்து இருக்கும் எச்சரிக்கைப்
பட்டியல் அபாயகரமானது...

No comments:

Post a Comment