ஒரு ஊர்ல ரெண்டு ராஜா - சன்னி லியோன்.

இணையதளங்களில் தனது செழித்த இளமையை வழிய விட்டு உலகெங்கிலுமுள்ள இளவட்ட ரசிகர்களை சூடேத்தி வந்தவர் சன்னி லியோன். பின்னர் பாலிவுட்டில் சினிமாவில் அங்கம் வகித்தவர், படத்துக்குப்படம் தனது அங்கங்களை அதிக அளவில துஷ்பிரயோகமும் செய்து வந்தார். சில படங்களில் நிர்வாண கோலத்திலும் நடித்தார்.
இதனால், ஆண்களின் அபிமானியான சன்னி லியோன் பெண்களுக்கு பகையாளியாகி விட்டார். இருப்பினும் பாலிவுட்டில் படத்துக்குப்படம் சன்னிக்கான ரேட்டிங் எகிறிக்கொண்டே செல்வதால் அவரது படக்கூலி கோடிக்கணக்கில் உயர்ந்து கொண்டே செல்கிறது.



இந்த நிலையில, வடஇந்திய ரசிகர்களை துவம்சம் செய்து கொண்டிருக்கும் சன்னி, ஜெய் நடித்துள்ள வடகறி படம் மூலம் தென்னிந்திய ரசிகர்களையும் துவம்சம் செய்வதற்காக கோதாவில் குதித்திருக்கிறார். வடக்கே துண்டு துக்கடா என்று கவர்ச்சியை கொத்து கறி போட்ட சன்னி லியோனை, வடகறி படத்தில் புடவை கட்டி விட்டு அழகு பார்த்துள்ளனர். ஆனபோதும், அந்த புடவையிலேயே எவ்வளவுக்கு எவ்வளவு கவர்ச்சி காட்ட முடியுமோ அதை தனது மனம் போல் வாரி வழங்கியிருக்கிறாராம் சன்னிலியோன். தமிழக ரசிகர்களை ஏமாற்றி விடக்கூடாது என்ற அம்மணியின் பெரிய மனசுதான் இதற்கு காரணமாம்.

ஆக. அந்த படத்தை ஆவலுடன் இளையதலைமுறையினர் எதிர்பார்த்திருக்கும் வேளையில், இப்போது விமல் நடித்து வரும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா என்ற படத்திலும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறாராம் சன்னி லியோன். வடகறியில் சன்னியுடன் குத்தாட்டம் ஆட வேண்டும் எனறு சொன்னதிலிருந்தே அப்பட நாயகன் ஜெய் தொடை நடுங்கிக்கொண்டு திரிந்தது போன்று இப்போது விமலும் சன்னியை பார்க்கும் முன்பே ஜன்னி வந்தவரைப்போன்று வெடவெடத்துப்போய் கிடக்கிறாராம்