லிங்கா சினிமா முன்னோட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிரடியாக நடித்து வரும் படம் லிங்கா. ரஜினியின் அடுத்த படம் என்ன என்று ஆளாளுக்கு ஜோதிடம் சொல்லிக்கொண்டிருந்தபோது எல்லோருடைய கணிப்பையும் பொய்யாக்கிவிட்டு மைசூரில் களத்தில் குதித்து விட்டார் ரஜினி. லிங்கா பற்றிய முதல் தகவல் அறிக்கை இது







* சூப்பர் ஸ்டார் எப்போதுமே நட்புக்கு மரியாதை கொடுப்பவர். அந்த வகையில் தன்னை வைத்து 25 படங்கள் இயக்கிய எஸ்.பி.முத்துராமனுக்காக பாண்டியன் படத்தில் நடித்துக் கொடுத்தார். தன் நண்பன் நட்ராஜுக்காக அன்புள்ள ரஜினிகாந்த் நடித்துக் கொடுத்தார். வறுமையில் வாடிய வி.கே.ராமசாமி, பண்டரிபாய்க்காக அருணாச்சலத்தில் நடித்தார். பள்ளிக்கால நண்பர்களுக்காக வள்ளி, படையப்பாவில் நடித்தார். இப்போது தனது நண்பர் ராக்லைன் வெங்கடேசுக்காகவும், தன் அண்ணன் சத்யநாராயணராவ் கெய்ட்வாட்டுக்காகவும் லிங்கா படத்தை நடித்துக் கொடுக்கிறார்.
* படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஒருவர் குட்டி ஜமீன்தார் மாதிரி இருப்பார். முறுக்கிய மீசை, சுருள்முடி கொண்ட தோற்றம். இவர் 100 சதவிகிதம் நல்லவர். அடுத்த ரஜினி தாதா மாதிரி தலையில் கட்டிய ரிப்பன், பரட்டை தலை, விதவிதமா உடைகள் கொண்ட கேரக்டர். இவர் 25 சதவிகிதம் நல்லவர் 75 சதவிகிதம் வில்லன்.
* கதை: 50 ஆண்டுகளுக்கு முன்பு கொடூரமான தண்ணீர் பஞ்சம் வருகிறது. அதை போக்குவதற்காக ஊர் பண்ணையார் ரஜினி தன் சொந்த செலவில் ஆற்றின் குறுக்கே அணை கட்டுகிறார். ஊர் செழித்தால் தங்கள் பிழைப்பு போய்விடும் என்று கருதும் சமூகவிரோத கூட்டம் அணை கட்டும் ரஜினி பற்றி தவறான செய்திகளை ஊருக்குள் பரப்புகிறது. அதை நம்பும் ஊர் மக்கள் ரஜினியை தூற்றுகிறார்கள். இதனால் மனம் வருந்தும் ரஜினி அணையை கட்டிவிட்டு ஊரைவிட்டே சென்று விடுகிறார்.
அதன் பிறகு அணையை மக்கள் கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்து நடக்கிறது. சிலர் கொலை செய்யப்படுகிறார்கள். அணை கட்டிய ரஜினியை அவமானப்படுத்தியதால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்று கருதும் மக்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு அவரை தேடிக் கண்டுபிடித்து அழைத்து வருகிறார்கள். அவர் வந்ததும் என்ன நடக்கிறது என்பது ஒரு கதை.
* அடுத்து இன்னொரு ரஜினியின் கதை. எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அடிதடி, திருட்டு, கடத்தல் என வாழும் தாதா ரஜினி. அவரை போலீஸ் வலைவீசி தேட அணையில் வந்து மறைந்து தலைமறைவாக இருக்கிறார். அப்போதான் அந்த அணைக்குள் ஒரு கூட்டம் ஒழிந்து இருந்து அந்த வழியாக வருகிறவர்களிடம் வழிப்பறி செய்வது, கொலை செய்வது பெண்களை மானபங்கபடுத்துவது போன்ற காரியங்களை செய்து வருவது தெரிகிறது.
அணையை காப்பாற்ற வந்த பெரியவர் ரஜினியும், அணையில் பதுங்க வந்த வில்லன் ரஜினியும் இணைந்து எப்படி அணையை மீட்டு மக்களை காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் கதை என்று இப்போதைக்கு கசிந்திருக்கிறது.
* படத்துக்காக மைசூரில் பிரமாண்ட அரண்மணை செட்டும், அணை செட்டும் போடப்பட்டுள்ளது. அதில்தான் தற்போது படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.
* அணையை கட்டும் ரஜினிக்கு சோனாக்ஷி சின்ஹா ஜோடி. வில்லன் ரஜினிக்கு அனுஷ்கா ஜோடி.
* இளைய ரஜினியின் நண்பனாக வடிவேலு நடிக்க பேச்சு நடந்து வருகிறது. இன்னொரு நண்பனாக நான் ஈ சுதீப்பும், வில்லனாக ஜெகபதி பாபுவும் நடிக்கிறார்கள்.
* இரண்டு பாடல் காட்சிகள் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட உள்ளது.
* பிரியாமணி ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகளாக நடித்த சாருலதா படத்தை இயக்கிய பொன்ராம் கதை, வசனத்தை எழுதி உள்ளார். அதனை கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார்.
* படத்தின் மொத்த பட்ஜெட் 200 கோடி.
*வருகிற டிசம்பர் மாதம், அல்லது பொங்கல் ரிலீசாக படம் வெளிவருகிறது.