பாதுகாப்புப் படை சார்ந்த அஸிஸ்டென்ட் கமான்டெண்ட்
காலியிடங்கள் 136ஐ நிரப்புவதற்காக நடத்தப்படும் தேர்விற்கான அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
இதை யு.பி.எஸ்.சி.,
அறிவித்துள்ளது.
பிரிவுகள்
மற்றும் காலியிடங்கள்: யு.பி.எஸ்.சி., அமைப்பு நடத்தும் பொது
எழுத்துத் தேர்வின் மூலமாக பார்டர் செக்யூரிட்டி போர்ஸில் 68ம், சென்ட்ரல் ரிசர்வ்
போலீஸ் போர்ஸில் 28ம், சென்ட்ரல்
இன்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி போர்ஸில் 40ம் சேர்த்து மொத்தம் 136
காலியிடங்கள்
நிரப்பப்பட உள்ளன.
வயது: 01.08.2014
அடிப்படையில் 20 வயது நிரம்பியவராகவும், 25 வயதை அடையாதவராகவும்
இருக்க வேண்டும். அதாவது 02.08.1986க்கு
பின்னரும் 01.08.1994க்கு
முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின்
மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்வு மையங்கள்: இந்த தேர்வு தமிழ் நாட்டில் சென்னை
மற்றும் மதுரையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க
வேண்டும்.
தேர்வு நாள்: 13.07.2014 காலை மற்றும் மதியம் என
இரு பகுதிகளாக நடத்தப்படும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 12.05.2014.