100 கோடியை கடந்த 'ஐ' வசூல்











'' திரைப்படம் கடந்த 14ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அதிக 
வரவேற்புடனும், அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் நல்ல வரவேற்புடனும் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் முதல் நாள் வசூல் உலக அளவில் சுமார் 30 கோடி ரூபாய் அளவில் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக நாம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம். அடுத்தடுத்த நாட்களிலும் பொங்கல் விடுமுறை தினம் என்பதால் '' படத்தின் வசூல் 25 கோடியிலிருந்து 30 கோடி வரை உலக அளவில் நடைபெற்றுதாக வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த நான்கு நாட்களாக தென்னிந்திய மாநிலங்களில் '' படத்தின் வசூல் முதல் நாளுடன் ஒப்பிடும் போது ஓரளவுதான் குறைந்து காணப்பட்டது. நேற்று காணும் பொங்கல் நாள் என்பதால் முதல் நாள் அளவிற்கு வசூல் நடந்ததாகச் சொல்கிறார்கள்.

இந்த நான்கு நாட்களிலேயே '' படத்தின் மொத்த வசூல் 100 கோடி ரூபாயிலிருந்து 110 கோடி ரூபாய் வரை இருந்திருக்கும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளில் படத்தை வாங்க முயற்சித்து வாங்க முடியாமல் தவித்த சில நிறுவனங்கள் படத்தைப் பற்றிய தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் தெரிகிறது. அதே போல், ஆந்திராவிலும் சில சிறிய தயாரிப்பாளர்கள் '' படத்தின் வசூலைப் பார்த்து பொறமைப்பட்டு நெகட்டிவ்வான செய்திகளை பரப்பி வருகிறார்கள். அவையெல்லாம் படத்தை பாதிக்காமல் மக்கள் படத்தை ஒரு முறையேனும் பார்த்து விட வேண்டும் என்று திரையரங்குகளுக்கு கூட்டம் கூட்டமாய் வருகிறார்களாம். கேரளா, ஆந்திராவில் இன்னும் ஒரு சில நாட்களிலேயே படத்திற்கான லாபம் என்ன என்பதும் தெரிந்து விடுமாம். 

No comments:

Post a Comment