என்ன பிடிச்சிருக்கா

சுப்புராஜ் இயக்கத்தில் அனுராதா மகன் கதானாயகனாகும் “என்ன பிடிச்சிருக்கா”
பிரைட் பியூச்சர் மூவி மேக்கர்ஸ் என்ற புதிய படநிறுவனம் சார்பாக பி.ஏ.பிரகாசம் தயாரித்துக் கொண்டிருக்கும் படத்திற்கு “என்ன பிடிச்சிருக்கா” என்று பெயரிட்டுள்ளனர்.


கதாநாயகனாக நடிகை அனுராதாவின் மகன் கெவின் அறிமுகமாகிறார்.
கதாநாயகியாக பிரீத்தி விஜ் அறிமுகமாகிறார். மற்றும் ரவிமரியா, ஜெரால்டு, சின்ராசு, டயானா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், ஸ்ரீதேவி அணில் ஆகியோர் நடிக்கிறார்கள். கதாநாயகியின் தாத்தாவாக தயாரிப்பாளர் பி.ஏ.பிரகாசம் அறிமுகமாகிறார்.
ஒளிப்பதிவு – ராஜா
இசை – ஸ்ரீவித்யா கலை. இவர் எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி ஆகிய இருவரைப்பற்றி ஆராய்ச்சி செய்து பி.ஹெச்.டி பட்டம் பெற்றவர் நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு இசையமைப்பாளர் அறிமுகமாவது குறிப்பிடத் தக்கது.
பாடல்கள் – விவேகா , கலை – கணேஷ் தேவராஜ்
நடனம் – காதல் கந்தாஸ், ராபர்ட், அபிநயஸ்ரீ , ஸ்டன்ட் – திரில்லர் முகேஷ்
எடிட்டிங் – E.கோபாலகிருஷ்ணன் , தயாரிப்பு மேற்பார்வை – பி.விஸ்வநாதன்
தயாரிப்பு – பி.ஏ.பிரகாசம்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சுப்புராஜ். இவர் இயக்குனர்கள் மணிவண்ணன், விக்ரமன், ரவிமரியா போன்றவர்களிடம் இருபது வருடங்களுக்கு மேல் இணை இயக்குனராகப் பணியாற்றியவர்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது…
இந்த கதைக்கு புதுமுகங்களை தேடிக் கொண்டிருந்த போது நடிகை அனுராதாவின் மகன் பற்றி கேள்விப்பட்டு வரவழைத்துப் பார்த்தோம் பொருத்தமாக இருந்தார். உடனே ஒப்பந்தம் செய்தோம்.உலக முழுக்க நம்ம கலாச்சாரத்தைப் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்க நாமோ அந்நிய கலாச்சாரத்தை பெருமையாக நினைக்கிறோம்.
அந்நிய தேசத்தில் இருந்து வரும் ஒரு தாத்தா பேத்தி. பேத்திக்கு நமது கலாச்சாரத்தின் மீது பிடிப்பு ஏற்பட்டு, சிலம்பாட்டம் போன்றவற்றில் வீரனாக திகழும் கெவின் மீது காதல் கொள்கிறாள்.
அந்த காதலுக்கு ஏற்படும் தடைகளும் அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா?என்பது கதை என்றார் இயக்குனர் சுப்புராஜ்.
படப்பிடிப்பு முழுவதும் தேனி, கொடைகானல், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்று முடிந்திருக்கிறது.