முன்னணி வரிசையில் எத்தனை
கதாநாயக நடிகர்கள் இருந்தாலும், அஜித்குமாருக்கு இருக்கும் மாஸ் அலாதியானது. அதனாலேயே அவரது
படங்கள் வெளியாகும் நாட்களில் டிராபிக்ஜாம் ஆகுமளவுக்கு கூட்டம் அலைமோதுகின்றன.
முன்னணி
நடிகர்களில் அஜித்துக்கு இருக்கும் ஓப்பனிங் போல் வேறு யாருக்கும் இல்லை என்று
தியேட்டர்காரர்களே வெளிப்படையாகத் தெரிவித்து உள்ளனர். அப்பேற்பட்ட அஜித்தை வைத்து
படம் எடுக்க தனிப்பட்ட தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல, முன்னணி கார்ப்பரேட்
நிறுவனங்களும் கடும் முயற்சி செய்கின்றன.
அப்படி
தன்னை வைத்து படம் எடுக்க விருப்பம் தெரிவிக்கும் தயாரிப்பாளர்களுக்கு, தன்னால் தற்போது கால்ஷீட் தர
முடியாதநிலையை விளக்கிச் சொல்ல வைக்கிறார் அஜித். ஆனால் தன்னிடம் கால்ஷீட் கேட்டு
வரும் கார்ப்பரேட் நிறுவனங்களை அஜித் கண்டு கொள்வதில்லை.
காரணம்..கார்ப்பரேட்
கம்பெனிகளுக்கு படம் பண்ணுவதில்லை என்பது அஜித்தின் பாலிஸி.
கிரீடம்
படம் பண்ணியபோது அவருக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் காரணமாக இப்படியொரு முடிவை
எடுத்தாராம் அஜித். இது தெரியாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் அஜித்திடம் கால்ஷீட்
கேட்டு வருகின்றனவாம்.